Wednesday, January 14, 2026
Huisதாயகம்அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் - ஆசிரியர் தொழிற் சங்கங்கள்

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் – ஆசிரியர் தொழிற் சங்கங்கள்

கல்வி மறுசீரமைப்பு செயல்முறை ஒன்றின் அவசியத்தை ஏற்றுக் கொள்வதாகவும், புதிய கல்வி மறுசீரமைப்புகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறை குறித்து இங்கு ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.

முதலாம் தரத்திற்கான மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும். மொடியூல்களை தயாரிப்பதில் நிலவும் பிரச்சினைகள், ஆசிரியர் பயிற்சிகளில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்த்துக் கொண்டு, 06 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.

கல்வி மறுசீரமைப்பு செயல்முறை ஒன்றின் அவசியத்தை ஏற்றுக் கொள்வதாகவும், புதிய கல்வி மறுசீரமைப்புகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!