Wednesday, January 14, 2026
Huisதாயகம்யாழில் கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு; உரிமையாளரே தீ வைத்தாரா எனச் சந்தேகம்..!

யாழில் கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு; உரிமையாளரே தீ வைத்தாரா எனச் சந்தேகம்..!

யாழ், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும் கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்தின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்டிடத்தின் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததாக முதற் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் காரணமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதே வேளை ஏதாவது காப்பறுதி பெறுவதற்காக அல்லது தனக்கு சிங்கள மக்களிடம் அனுதாபம் உள்ளிட்ட அரசியல் நலனை தேடுவதற்காகவும், பண உதவி பெறுவதற்காகவும் தனது அலுவலகத்தை தனது ஆட்களைக் கொண்டே எரித்து நாடகமாடியிருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!