Wednesday, January 14, 2026
Huisதாயகம்மாணவர்களின் பாடசாலை உபகரணக் கொள்வனவிற்கு இவ்வாண்டும் 6000 ரூபா..!

மாணவர்களின் பாடசாலை உபகரணக் கொள்வனவிற்கு இவ்வாண்டும் 6000 ரூபா..!

பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளுக்கான கொடுப்பனவு வழங்கும் வேலைத் திட்டத்தை இவ்வாண்டிலும் நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அஸ்வெசும உரித்துள்ள குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு மாணவன் அல்லது மாணவிக்கு 6,000 ரூபா கொடுப்பனவை நலன்புரிகள் நன்மைகள் சபை மூலமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அஸ்வெசும வேலைத் திட்டத்தில் உள்வாங்கப்படாததும், ஆனாலும் கொடுப்பனவு கிடைக்க வேண்டியவர்கள், நாடளாவிய ரீதியில் 300 பிள்ளைகளுக்கும் குறைவாகவுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் துறவுப் பெண்கள் ஆச்சிரமங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் மற்றும் துறவு மாணவர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்காக ஒருவருக்கு 6000 ரூபா கொடுப்பனவை கல்வி. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடாக செலுத்துவதற்கும், 2025 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை இவ்வாண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!