நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, நேற்று (23.01.2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணியிடை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரது நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் விளக்கம் கேட்கப்படாததால், இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய அவசியம் இந்த ஆலோசனைக் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recent Comments