வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு தமிழ் ஊடகவியலாளர்களை அழைக்காது சிங்கள ஊடகவியாலளர்களை மட்டும் அழைக்கப்படுவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியாவிற்கு அண்மையில் நீதித்துறை அமைச்சர் வருகை தந்திருந்ததுடன், ஊடக சந்திப்பு ஒன்றினையும் மாவட்ட செயலகத்தில் நடத்தியிருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் சிங்கள மொழி ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் தமிழ ஊடகவியலாளர் எவருக்கும் அழைப்பு வழங்கப்படவில்லை.
வவுனியா மாவட்ட செயலகத்தில் தொடர்பாடல் உத்தியோகத்தர் இருந்தும் தொடர்ச்சியாக பல நிகழ்வுகளுக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் புறககணிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் மாவட்ட செயலகத்தில் பல முறை தெரியப்படுத்தியும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், இது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் என்பவற்க்கும் முறையிடவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Recent Comments