இவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க காணொளி அழைப்புகள் (Video Calls) மற்றும் காட்சிகள், அந்த மாணவரின் நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் இடைநீக்கம்-முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு ஆசிரியைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த மாணவரிடமிருந்து ஆசிரியைகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் கல்வி அமைச்சின் ஒழுக்காற்றுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சைபர் குற்றத்தடுப்பு பிரிவு-காணொளிகள் கசிந்த விதம் மற்றும் அதனைப் பரப்பியவர்கள் குறித்து காவல்துறையின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவினர் தனி விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களின் இத்தகைய ஒழுக்கமற்ற செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த ஆசிரியைகள் சமூகப் பிறழ்வான செயல்களில் ஈடுபட்டமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரையும் அரச சேவையிலிருந்து முழுமையாக நீக்க வேண்டியது கல்வி அமைச்சரின் பொறுப்பாகும்.
ஒழுக்கமற்ற கல்வி மாணவர்களை எங்கு கொண்டு சேர்க்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.


Recent Comments