Tuesday, March 17, 2026
Huisதாயகம்வவுனியாவில் வெகு சிறப்பாக நடைபெற்ற பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு..!

வவுனியாவில் வெகு சிறப்பாக நடைபெற்ற பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு..!

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வவுனியா மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து நடாத்திய நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) 2026.03.16 (திங்கட்கிழமை) மாலை 05.00 மணிக்கு வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம விருந்தினர்களாக வடமாகாண ஆளுநர் கெளரவ வேதநாயகன், பிரதி அமைச்சர் கெளரவ உபாலி சமரசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும், வவுனியா மாவட்ட செயலாளர் திரு. சரத்சந்ர ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அவர்களுடன் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகத்தினர், மன்னார் – வவுனியா பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட மாகாண கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டுக் குழுவினரால் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். அதன் பின்னர் ஆசியுரையைத் தொடர்ந்து வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. நோக்கவுரையினை வடமாகாண கலாச்சார திணைக்கள பணிப்பாளர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் முஸ்லீம் மாணவர்களின் கலை கலாசார, பாரம்பரிய நிகழ்வுகளும் தொடர்ச்சியாக பிரதம விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் பாங்கும் துவாவும் ஓதப்பட்டு நோன்பு திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கலாசார நிகழ்ச்சிகளை பாடசாலை மாணவர்கள் வழங்கினர். மாலை 7.00 மணியளவில் வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் பிரதீபன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!