Friday, April 3, 2026
Huisதாயகம்ஒலுமடுவில் நெல் உலர்த்தும் தளம் அமைக்க சத்தியலிங்கம் எம்பி 1.2 மில்லியன் ஒதுக்கீடு..!

ஒலுமடுவில் நெல் உலர்த்தும் தளம் அமைக்க சத்தியலிங்கம் எம்பி 1.2 மில்லியன் ஒதுக்கீடு..!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியில் நெல் உலர்த்தும் தளம் அமைப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2026ம் ஆண்டிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 1.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராசா சுசீலன் அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் குறித்த பகுதியை சேர்ந்த விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு குறித்த நிதியொதுக்கீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

இதற்கான அனுமதி கடிதம் நேற்று (02.04.2026) ஒலுமடு கமக்காரர் அமைப்பினரிடம் கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, பிரதேசசபை உறுப்பினர் செ.சுசீலன், பாராளுமன்ற உறுப்பினரின் வவுனியா வடக்கு பிரதேச இணைப்பாளர் தவேந்திரராசா (அமலன்) உள்ளிட்டோர் குறித்த அனுமதி கடிதத்தினை அமைப்பினரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!