பதுளை ஹல்துமுல்ல பகுதியில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, பாடசாலை நேரத்தில் மது அருந்தியதற்காக நேற்று(10) கைது செய்யப்பட்டது.
அவர்கள் அனைவரும் சுமார் 16 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் கடுமையாக நோய் வாய்ப்பட்ட நிலையில் ஹல்துமுல்ல மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கவலைக்கிடமான நிலையில் தியத்தலாவ ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவர் மதுவின் வாசனையை மறைப்பதற்காக ஒரு வாசனைப் பொருளை அருந்திய பின்னர் மது அருந்தியுள்ளார்.
ஹல்துமுல்ல காவல்நிலைய பொறுப்பதிகாரி, சி.ஐ. அசோகா இந்துனில் ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட பாடசாலை முதல்வர் மற்றும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறினார்.
இதற்கிடையில், அப்பகுதி மக்கள் இந்தச் சம்பவம் குறித்து கவலை தெரிவித்தனர்.


Recent Comments