கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த மாணவி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவியின் மரணம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைகள் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல என்பதுடன், சட்டத்தினூடாக அதிபர் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே தற்கொலைகள் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல பிரச்சினைகளை சவாலாக எடுத்து வென்று காட்ட வேண்டும் என்பதை போதிக்க வேண்டும்.


Recent Comments