Sunday, May 3, 2026
Huisதாயகம்வவுனியா வடக்கில் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு..!

வவுனியா வடக்கில் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு..!

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எழுச்சிப் பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமரர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு 02.05.2026 இன்று வவுனியா வடக்கில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அந்த வகையில் வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்தைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

இந்நிலையில் ஈகைச்சுடர் ஏற்றலுடன் தொடங்கிய இந்த அஞ்சலி நிகழ்வில், தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு, பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவின் வரலாற்றுக் குறிப்புக்களும் பகிரப்பட்டது. அத்தோடு தேனிசை செல்லப்பா அவர்களது பாடலும் இதன் போது பாடப்பட்டு அவருக்கு இசை அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சுசீலன், தனுசன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தனது மாகாணசபை காலத்தில் தமிழகத்தில் தேனிசைச் செல்லப்பா, செந்தமிழன் சீமான், பழநெடுமாறன், காசி ஆனந்தன், வைகோ போன்ற பல தமிழகத் தலைவர்களைச் சந்தித்த உணர்வுபூர்வமான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!