சிறிலங்கா திறைசேரியில் நடந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி மையத்தில் உயர்அதிகாரி ஒருவரின் உடல் நரம்புகள் அறுக்கப்பட்ட குருர தற்கொலையின் பின்னணியில் இந்த மோசடியின் நதிமூலம் ரிசிமூலம் குறித்து இதுவரை எந்த துப்புகளும் கிட்டவில்லை.
இப்போது அமெரிக்காவின் FBI அமைப்பின் கால்களில் சிறிலங்கா விழுந்து விட்ட நிலையில் இணைய மோசடி குழுக்களை தேடி உள்ளுர் அதிரடிகளும் இடம் பெறுகின்றன.
நேற்று நடத்தப்பட்ட முதல் ஒப்ரேசனில் ஒரு பெண் உட்பட 37 சீனர்கள் தலங்கமவின் கொஸ்வத்த பகுதியில் மாட்டிய நிலையில் கொழும்பின் புறநகரான ராஜகிரிய பகுதியில் நடத்தப்பட்ட ஒப்ரேசனில் சிறிலங்கா காவற்துறையையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் நூற்றுக்குமேற்பட்ட வெளிநாட்டவர்களை கொண்ட மெகா குழு சிக்கியுள்ளது.
ஒரு கட்டிடத்தில் பல தளங்களை வாடகைக்கு எடுத்து, இந்தக குழு தமது அதிநவீன மோசடித் தொழிலை நடத்திய நிலையில் காவற்துறையின் இந்த ஒப்ரேசனில் பிடிபடாமல் பலர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.


Recent Comments