Sunday, June 7, 2026
Huisதாயகம்யாழில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெருந் தொகையாக சிக்கிய கஞ்சா..!

யாழில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெருந் தொகையாக சிக்கிய கஞ்சா..!

அச்சுவேலி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வளலாய் பகுதியில் இன்றைய தினம்(07) அதிகாலை வேளை 230கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதியினை வாகனத்தில் ஏற்றி வந்து ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இரணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி விசேட அதிரடி படையினரால் இந்தசுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றி வளைப்பின் போது கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதி அச்சுவேலி காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் விசேட அதிரடிப் படையினர் வருவதாக தெரிந்து தப்பி சென்றுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!