கடமை நேரத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு துன்புறுத்தல் விளைவிக்க முயன்ற மற்றும் மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று (17) முதல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி தம்புள்ளை ‘கம்உதாவ’ மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடமையில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர், தனது கடமைகளைப் பதிவு செய்வதற்காக அவர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்திருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு, அவரது மடியில் அமர இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், குறிப்பிட்ட கான்ஸ்டபிள் அந்த நேரத்தில் கடுமையான மதுபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


Recent Comments