Friday, July 24, 2026
Huisதாயகம்முன்னாள் பிரதம செயலாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது..!

முன்னாள் பிரதம செயலாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது..!

தென் மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளரொருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு தென் மாகாண சபை உறுப்பினர் ஏற்பாட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.16.5 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் பொது தன்னார்வ அமைப்புகளுக்கு நாற்காலிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அரசின் கொள்முதல் நடைமுறைகளை மீறி ஒரு உற்பத்தி நிறுவனத்தைத் தேர்வு செய்து, அதற்கு சாதகமாக செயற்பட்டு அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!