Tuesday, August 11, 2026
Huisதாயகம்தனியார் கல்வி நிலையம் சென்ற 14 வயது சிறுமி மாயம்; கண்டு கொள்ளாத பொலிசார்..!

தனியார் கல்வி நிலையம் சென்ற 14 வயது சிறுமி மாயம்; கண்டு கொள்ளாத பொலிசார்..!

மட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையம் செல்வதாக சொல்லிச் சென்ற தமது மகளை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா(வயது 14) என்ற மகளையே கடந்த 02 ஆம் திகதி முதல் காணவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

வழமையாக பாடசாலை சென்று வந்து பிற்பகல் 02 மணிக்கு தனியார்கல்வி நிலையம் சென்றுள்ளார்.மாலை ஆறுமணியாகியும் அவர் வராத காரணத்தால் 119 என்ற காவல்துறையின் அவர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டது.

மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையம் சென்று முறைப்பாடு அளித்த போதிலும் இன்றுவரை காவல்துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!