Wednesday, August 12, 2026
Huisதாயகம்அரச வாகன ஏலத்தில் 10 மில்லியன் மோசடி; சிக்கிய NPP அமைச்சரின் மைத்துனர்..!

அரச வாகன ஏலத்தில் 10 மில்லியன் மோசடி; சிக்கிய NPP அமைச்சரின் மைத்துனர்..!

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தவின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளாார்.

கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுசந்த சுதர்சன எனப்படும் குறித்த நபர் அமைச்சர் லால் காந்தவின் மனைவியின் தங்கையின் கணவர் ஆவார்.

அரச வாகன ஏலத்தின் போது நபர் ஒருவரிடம் 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக அமைச்சர் லால் காந்தவின் மைத்துனருக்கு எதிராக சுரங்க ரஞ்சித் சமரவீர என்பவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக அனைத்துக் காரணிகளும் வெளிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அமைச்சரின் மைத்துனரை நேற்று (11-08-2026) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாததால் நேற்று இரவு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று (12-08-2026) கேகாலை நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அமைச்சர் லால் காந்த தரப்பிலிருந்து எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!