Tuesday, August 11, 2026
Huisதாயகம்இலங்கையில் மேலதிக முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் சீனாவின் CCCC நிறுவனம்..!

இலங்கையில் மேலதிக முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் சீனாவின் CCCC நிறுவனம்..!

சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி லிமிடெட் (CCCC) நிறுவனத்தின் ஷாங் பிங்னான் (Zhang Bingnan) தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது கொழும்பு துறைமுக நகர திட்டத்துடன் தொடர்புடைய நடப்பு மற்றும் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த CCCC நிறுவனத்தின் பிரதிநிதிகள்,

ஜனாதிபதியின் தொலைநோக்குக் கொள்கைகளும் வேலைத் திட்டங்களும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த உதவியுள்ளதாகவும், இலங்கையில் மேலும் குறிப்பிடத்தக்க முதலீட்டு வாய்ப்புகளை ஆராயத் தங்களை ஊக்குவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

புதுப்பிக்கத்தக்க சக்தி, வர்த்தகம் மற்றும் தளவாடங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.

இத்துறை சார்ந்த பிராந்திய மையமாக இலங்கை உருவெடுப்பதற்கும், அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், தங்களது முதலீட்டுத் திட்டங்களில் 90% ஊழியர்கள் உள்ளூர் மட்டத்திலேயே ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும், இதன் மூலம் இலங்கையர்களுக்குப் பெருமளவிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!