Wednesday, February 5, 2025
Huisதாயகம்தலைமுடி வெட்டியதால் பாடசாலை மாணவன் உயிர் மாய்ப்பு..!

தலைமுடி வெட்டியதால் பாடசாலை மாணவன் உயிர் மாய்ப்பு..!

தலைமுடி வெட்டியதால் பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (08) இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனின் தலைமுடியை வெட்டுமாறு அவனது தாயாரிடம் பாடசாலையில் அறிவுறுத்தப்பட்டிருந்த காரணத்தினால், தாய் மாணவனின் தலைமுடியை சிறிதளவு வெட்டியுள்ளார்.

இதன்போது மாணவனுக்கும் அவனது தாய்க்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவமானது வெல்லவாய – மெதகலகம பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!