மலேசியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி இன்று (11) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டது.
16 அணிகள் பங்குபற்றும் இப் போட்டித் தொடரின் ஆரம்ப சுற்றில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு இலங்கை அணி ‘ஏ’ பிரிவில் விளையாடவுள்ளது.
தொடரின் முதல் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இதன் கீழ் இலங்கையின் முதல் போட்டி மலேசியாவுக்கு எதிராக ஜனவரி 19ஆம் திகதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷானின் மகள் லிமான்சா திலகரத்ன உட்பட 15 பேர் கொண்ட அணியை நேற்று (10) இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்தது.
அணித் தலைவராக மொரட்டுவை வேல்ஸ் கல்லூரியின் மானுடி நாணயக்கார தெரிவு செய்யப்பட்டார்.
Recent Comments