Monday, October 27, 2025
Huisதாயகம்அரசு நட்டஈடு தராது விட்டால் மருந்து குடித்து தான் சாகவேண்டும் - புதுக்குடியிருப்பு விவசாயிகள் கவலை

அரசு நட்டஈடு தராது விட்டால் மருந்து குடித்து தான் சாகவேண்டும் – புதுக்குடியிருப்பு விவசாயிகள் கவலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட மன்னாகண்டல் கமக்கார அமைப்புக்கு உட்பட்ட பகுதியில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்கள் நிலங்கள் மழை வெள்ளம் காரணமாக

அழிந்துள்ளதாகவும், அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் இவ்வாண்டு 1400 ஏக்கரில் காலபோக நெற்செய்கை செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் வயல் அறுவடைக்கு தயாரான நிலையில் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளன.

இந்நிலையில் கடன்களை பெற்று நெற்செய்கை மேற்கெண்ட நாங்கள் மருந்து குடித்து சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்கலாய்க்கின்றனர்.

மழை வெள்ளத்தால் வயல்கள் அழிவடைந்து பல தரப்புக்களுக்கும் அறிவித்து இதுவரை யாரும் வருகை தந்து வயல் நிலங்களை பார்வையிட கூட இல்லை என்று கவலை வெளியிட்டுள்ளனர்

கடந்த போகத்திலும் காப்புறுதி செய்து அழிவடைந்த வயல் நிலங்கள் உரிய வகையில் பார்வையிடவோ இழப்பீடு வழங்கபபடவோ இல்லை. இம்முறையும் இதுவரை எந்த அதிகாரிகளும் வருகை தந்து பார்வையிடவில்லை.

அரசாங்கம் உடனடியாக எமது நிலமைகளை கருத்தில் கொண்டு இழப்பீடுகளை வழங்க முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!