பசிலுக்கும் யோஷிதாவுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு காரணம் இதுதான்..!

கடந்த வாரம் முழுவதும் பசிலுக்கும் யோஷிதாவுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்குக் காரணம் மஹிந்த ஜனாதிபதி ரணிலிடம் பிரதமர் பதவியைக் கேட்டதையடுத்து, பசில் ஜனாதிபதியை சந்தித்து அதனை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.



இதன் காரணமாக யோஷிதாவுக்கும் பசிலுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனாலேயே பசில் திடீரென இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

பசில் டுபாய் செல்வதை மிக ரகசியமாக பேண ஏற்பாடு செய்திருந்ததால், குறைந்தபட்சம் அந்த பயணம் குறித்து மகிந்தவுக்கு தெரிவிக்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.



எவ்வாறாயினும், பெரமுன கட்சி உறுப்பினர்களும் மூன்றாம் தரப்பினரும் தற்போது பசிலுக்கும் யோஷிதவுக்கும் இடையில் நல்லிணக்கப் பாலத்தை அமைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களாக டுபாயில் இருக்கும் பசிலுக்கும் யோஷிதாவுக்கும் இடையில் பல தொலைபேசி செய்திகள் பரிமாறப்பட்டதாக தெரிய வருகிறது.