இலங்கையின் அதிகாரம் ரணிலிடமா அல்லது மகிந்தவிடமா? செல்வம் எம்.பி கேள்வி

ஜனாதிபதியுடன் உத்தரவிட்ட பின்னரும் சில செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. உண்மையில் அதிகாரம் அதிபரிடமா அல்லது மகிந்தவிடமா என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற கிறிஸ்ரி குகராஜாவின் நினைவு தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

‘நாடு முழுவதும் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாகி உள்ளது. எனவே ஜனாதிபதி இதற்கான பதிலை மக்களுக்கு சொல்ல வேண்டும். முப்படைகளை களமிறக்கி மக்களை அச்சுறுத்துவது தவறான செயற்பாடகவே நான் பார்க்கிறேன்.

அண்மையில் ஜனாதிபதியுடன் எமது சந்திப்பு இடம்பெற்றது. சில விடயங்கள் தொடர்பாக அவர் உத்தரவிட்ட பின்னரும் அதனை மீறும் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.



வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடு வன்னியிலும் பரவலடைந்துள்ளது.

எனவே அதிகாரம் ஜனாதிபதியிடன் இருக்கிறதா அல்லது மகிந்த ராஜபக்சவின் கைகளில் இந்தத் திணைக்களங்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கும் இருக்கின்றது. மகிந்த தான் அவர்களுக்கு கட்டளை இடுகின்றாரா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது.



எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மொட்டுக் கட்சியை காப்பாற்றும் செயற்பாட்டை அவர் மேற்கொண்டால் அவர் செய்யும் நற்செயல்களுக்கும் கெட்ட பெயரே ஏற்படும் எனத் தெரிவித்தார்.