வடக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவி நீக்கம்..!

நாட்டின் மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்களை பதவி நீக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.



அதன்படி, இன்று முதல் வடக்கு, கிழக்கு, வடமேற்கு மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.



மேலும், குறித்த மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நாளை மறுதினம் 17 ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.