முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் பணியில் இருந்த பெண்ணுக்கு இருவரால் நேர்ந்த துயரம்..!

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பெண் ஒருவரை இருவர் அவரை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் முல்லைத்தீவு மணலாறு பகுதியில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அந்தப் பெண் படுகாயமடைந்த நிலையில் இன்றைய தினம் (15-05-2023) காலை 9 மணியளவில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் வெலிஓயா படையினரின் சோதனைச் சாவடிக்கு அருகில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் எந்தவித உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் விடுக்கவில்லை.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை அருகே இருந்த காட்டுக்குள் இருந்து வந்த இருவர் வாயைப் பொத்தி காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.



அவர்களிடமிருந்து தப்பி காட்டிலிருந்து அந்தப் பெண் வெளியே ஓடி வந்து விழுந்த பின்னரே ஏனைய பணியாளர்களை அவரைக் கண்டு உதவி செய்து உடனடியாகத் தமது வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு விரைந்தனர்.

குறித்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் இப்போதைக்கு எதுவும் சொல் முடியாது. அவரது உடலில் காயங்கள் காணப்படுகின்றன.



அவர் உளவிய ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக மனநல சிகிச்சை தேவைப்படுவதால் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தனக்கு நடந்தவைகள் தொடர்பில் பேசக்கூடிய உடல் நிலையிலோ மனநிலையிலே அவர் இல்லாதபடியால் அவருக்கு நடந்தவைகள் குறித்து உறுதியான தகவல்கள் எதனையும் தெரிவிக்க முடியாது என முல்லைத்தீவு வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.