தரம் 8ல் கல்வி கற்கும் மாணவிக்கு தங்கத்தில் தாலி கட்டிய 09 ம் தர மாணவன்; மட்டக்களப்பில் சம்பவம்..!

மட்டக்களப்பு பிரபல பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் 10 ஆம் தர மாணவன் ஒருவன் மேலுமொரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 09 ஆம் தர மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இருவருக்கும் இடையில் சிலவருடங்களாக ஏற்பட்ட காதலில் சென்ற வருடம் குறித்த மாணவன் 09 தரத்தில் கல்விகற்கும் போது 08 தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு யாருக்கும் தெரியாமல் தங்கத்தில் தாலி கட்டியுள்ளான்.



இது யாருக்கும் தெரியாமல் ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் மாணவி சில தினகளுக்கு முன்பு பாடசாலைன் மூலம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது குறித்த மாணவியின் கழுத்தில் தாலி இருப்பதை பார்த்த சக மாணவிகள் இது குறித்து வினவி ஆசிரியையிடம் தெரிவித்தபோது ஆசிரியை கழுத்தை காட்டும் படி குறித்த மனைவியை கேட்டுக்கொண்டுள்ளார்



ஆனால் மாணவி மறுக்க கட்டாயத்தின் பேரில் ஆசிரியை மனைவியின் கழுத்தை பார்த்த போது தாலி இருப்பதை உறுதி செய்துள்ள ஆசிரியர் குறித்த மாணவன் மற்றும் மாணவியின் வீட்டில் தெரியப்படுத்தியுள்ளார்.



(இவ்வாறான செய்திகளை வழங்குவதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் மத்தியில் தமது பிள்ளைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே)