கனடா செல்ல முயன்ற பத்து இலங்கையர்கள் அதிரடியாகக் கைது..!

சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற பத்து இலங்கையர்கள் புதுடில்லி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகளை ஏமாற்றி புதுடில்லி விமானநிலையத்தின் ஊடாக கனடாவிற்கு அனுப்ப முயன்ற முகவர்களுடன் தொடர்புவைத்திருந்த பத்து இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் சென்னையில் வசிக்கும் மகேந்திரராஜா என்ற இலங்கையை சேர்ந்த முகவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



எய்ரோ நகருக்கு அருகில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களால் தாங்கள் ஏன் புதுடில்லி வந்தோம் என்ற சரியான காரணத்தை தெரிவிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்கள் தங்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத நிலையில், சந்தேகம் காரணமாக மேலதிக விசாரணைகளிற்காக அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



நீங்கள் சென்னை விமானநிலையத்திற்கு வாருங்கள் அங்கு ஒருமுகவர் நீங்கள் கனடாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வார் என இலங்கையர்களிற்கு தெரிவிக்கப்பட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான இலங்கையர்கள் வெவ்வேறு தினங்களில் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்-



மகேந்திரராஜா ஞாயிற்றுக்கிழமை விமானநிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் இவர்களை புதுடில்லியில் பஹர்ஹான்ஜ் பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கைதான இலங்கையகள் 10 பேரும் இந்திய குடிவரவுகுடியகல்வு துறையை ஏமாற்றி சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல முயன்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.