வவுனியா புளியங்குளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு..!

புளியங்குளம் – மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று (31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புளியங்குளம் – மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் இரவு தனது தோட்டத்திற்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.



தூக்கில் தொங்குவதை அவதானித்த நபர் புளியங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.



குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாமென ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.