அரசியல் கட்சியிடமிருந்து எனது வீட்டை மீட்டுத் தாருங்கள்; யாழில் முறைப்பாடு..!

யாழ் – மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தனது வீட்டை அரசியல் கட்சியிடம் இருந்து மீட்டுத் தருமாறு, நபரொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.



அவர் அளித்துள்ள முறைப்பாட்டில் ”யாழ்ப்பாணம் , சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டில் அரசியல் கட்சி ஒன்றின் மக்கள் தொடர்பு அலுவலகமொன்று இயங்கி வருகின்றது.



அந்த கட்சியினரை வெளியேறுமாறு நான் பல தடவைகள் கோரிய போதிலும், அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறுவதாக இல்லை.



எனவே அவர்களை வெளியேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பாதிக்கப்பட்டவர் முறையிட்டுள்ளார்.