வவுனியாவில் மனைவியை காணவில்லை; கணவன் பொலிசில் முறைப்பாடு..!

வீட்டிலிருந்து சென்ற தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

கடந்த 8ஆம் திகதி வீட்டிலிருந்த தனது மனைவி மதியம் 1மணியளவில் வெளியில் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த எஸ்.கேதீஸ்வரி வயது 31 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.



குறித்த பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது 0770780766