கனடா செல்லும் எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!

கனடாவில் அண்மைய கால குடியேற்றம் காரணமாக அதிகரிக்கும் சனத்தொகையால் அங்கு புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அண்மைகாலமாக இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் குடியேறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

குறிப்பாக இலங்கையர்கள் பலர் கனடாவுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கனடாவில் கடந்த ஆண்டு சுமார் 70 இலட்சம் கனடா பிரஜைகள் பட்டினியுடன் போராடியதாக கனடா புள்ளி விவரவியல் திணைக்களத்தின் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.



கடந்த ஆண்டில் 18 சதவீதமான குடும்பங்கள், உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்துள்ளன என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பின்மை என்பது தரமான உணவு அல்லது போதுமான அளவு உணவின் பற்றாக்குறை என திணைக்களம் வரையறுத்துள்ளது.

சிலர் அதிகரித்த பணவீக்கத்தின் மத்தியில் பல நாட்கள் உணவு இல்லாமல் இருந்தார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



2021ஆம் ஆண்டு 16 சதவீதமான கனடா குடும்பங்களே உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டதாக ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமான ஒரு பிரச்சினையாக காணப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.

ஏனெனில், இது பல்வேறு நோய் நிலைமைகள், மனநலப் பிரச்சினைகள், ஏனைய நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சுகாதார கட்டமைப்புகள் மீது அதிகரிக்கும் அழுத்தம் உணவுப் பாதுகாப்பின்மையானது, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிப்பதுடன், முன்கூட்டிய இறப்பிற்கும் வழி வகுக்கின்றது என கண்டறியப்பட்டுள்ளது எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்