2022 சாதாரண தரப் பரீட்சையை மீண்டும் நடாத்த திட்டமா? வெளியாகிய அறிவிப்பு..!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் சாதாரண தரப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



அத்துடன், அண்மைய நாட்களில் இடம்பெற்ற பரீட்சை மோசடியே இதற்குக் காரணம் எனவும் குறித்த செய்திகளில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.



பரீட்சை மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களுக்கு அப்பால் உரிய தரவுகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.



உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்