புத்தளம் பகுதியில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்குள் புகுந்து பாடசாலை உபகரணங்கள் மற்றும் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முந்தல் பகுதியில் உள்ள இரண்டு பாடசாலைகளிலேயே திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த இரு பாடசாலைகளிலும் சுமார் 8 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மாணவர்கள் இருவர் திருடப்பட்ட உபகரணங்களுடன் இன்று (26-12-2023) கைது செய்யப்பட்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டில் இரண்டு முறைகள் குறித்த இரண்டு பாடசாலைகளிலும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.