யாழில் சிறுமி துஸ்பிரயோகம்; 14,16 வயது சிறுவர்கள் உட்பட மூவர் கைது..!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞன் ஆகிய மூவரை கைது செய்யப்பட்டார்கள்.



கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு பின்னர் ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை இரு சிறார்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறும் , இளைஞனை யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.



சட்டத்தின் ஊடாக பொற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளமையே இதற்குரிய முக்கிய காரணம் என்பதுடன் மாற்று நடவடிக்கை உடன் எடுக்காத பட்சத்தில் எதிர்காலச் சமூகம் எதிர்காலம் இன்றி அழிவது உறுதி.