பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னதாகவே பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.



மேலும், 80 சதவீதமான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.