யாழில் 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் கைது..!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



குறிப்பிட்ட முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணையில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.



இதனடிப்படையில் தகவலை அறிந்து சிறுவனின் வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டதுடன் சிறுவனை கைது செய்துள்ளனர்.



மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த காவல்துறையினர் கைது செய்யப்பட்ட சிறுவனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.