சாந்தனின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை – சட்டத்தரணி புகழேந்தி

சாந்தனின் மரணம் இயற்கையானது இல்லை என்றும் அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சாந்தனின் உயிரிழப்பு தொடர்பில் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இதனை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்றைய தினம் உயிரிழந்தார்.

இது தொடர்பில் சட்டத்தரணி புகழேந்தி கூறுகையில்,

”ஈழத் தமிழருக்கு எதிராக இந்தியாவில் காணப்படும் திருச்சி சிறப்பு முகாம் என்பது இழுத்து மூடப்பட வேண்டும்.



அண்ணன் சாந்தன் விட்டுச்சென்றுள்ள இந்த செய்தியானது, உலகத்தில் கொடுமைகளை அனுபவிக்கும் ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக மாறியுள்ளது.



இலங்கை அரசு அனுமதி வழங்கியும் கூட இந்திய அரசினால் சாந்தன் தனது தாய்நாட்டுக்கு அனுப்பப்படாமல் மரணித்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது.”என தெரிவித்துள்ளார்.