யாழில் போக்குவரத்து சபை பேரூந்து விபத்து; சாவகச்சேரி இந்து மாணவன் பலி..!

யாழ்.சாவகச்சேரி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.



இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் பரணிதரன் (வயது18) என்ற க.பொ.த உயா்தர வகுப்பு மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு,



மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.



சம்பவம் தொடா்பாக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனர்