வவுனியா பொது வைத்திய சாலை காவலாளிகள் மீது தாக்குதல்; ஒருவர் காயம்..!

வவுனியா பொது வைத்திய சாலையின் காவலாளிகள் மீது இளைஞர் குழு ஒன்று நேற்றைய தினம்(15) இரவு தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

நேற்றைய தினம் இரவு11மணியளவில் வைத்திய சாலையில் நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக இளைஞர்கள் குழு ஒன்று வருகை தந்துள்ளது.



இதன் போது கடமையில் இருந்த காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.

குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான காவலாளி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.