இன்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது – இலங்கை மின்சார சபை அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம் பெறும் காலப் பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான முடிவு அறிவிக்கப்படும் வரை மின்வெட்டு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை உச்ச நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது. இந்த வழக்கு நாளை (பெப்ரவரி 03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அவமதிப்பு வழக்கு

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தது.