வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் திடீரென உயிரிழந்த கைதி..!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (5) உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த நபருக்கு இன்று திடீர் சுகவீனம் ஏற்பட்டது.



இதனையடுத்து அவர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கருணாரத்தின பண்டார என்ற 56 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.