யாழில் நகைக்கடை உரிமையாளரும், பணியாற்றிய பெண்ணும் சடலங்களாக மீட்பு..!

யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் , நகைக்கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தவறான முடிவெடுத்தே இவர்கள் உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இருவரது சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னே உயிரிழப்புப்புக்கான காரணம் தெரிய வரும். சம்பவம் தொடர்பில் யாழ் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.