எரிவாயு விலை ஒருசில தினங்களில் குறையும் சாத்தியம் வெளியாகிய மகிழ்ச்சித் தகவல்..!

சமையல் எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.



நாட்டின் பணவீக்கம் 70 சத வீதத்திலிருந்து 35 சத வீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த நிலையில் இதனை ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என்றும் கூறினார்.



ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய சாகல ரத்நாயக்க, ‘எண்ணெய் விலை குறைந்துள்ளதால், அடுத்த சில நாட்களில் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.