Wednesday, February 5, 2025
Huisதாயகம்புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதித் திகதி..!

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதித் திகதி..!

2024 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் பெப்ரவரி 06 ஆம் திகதி வரை மீளாய்வு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

பரீட்சார்த்திக்கு ஏதேனும் சிக்கல் இருக்குமாயின் பரீட்சைத் திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1911 மற்றும் 0112784208, 0112784537 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(23) மாலை வெளியாகின.

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 323,900 மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களில் 51,244 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!