Sunday, August 3, 2025
Huisதாயகம்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம் - வைத்தியர் சத்தியலிங்கம்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம் – வைத்தியர் சத்தியலிங்கம்

நாட்டில் உள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்தமைக்கு வெறுமனே ஊழல் மாத்திரமே காரணம் இல்லை. இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு உள்ளது.

தற்போது நாட்டின் பொருளாதார பிரச்சினையைத் தான் முதலில் தீர்க்க வேண்டும் எனவும் அதற்குரிய வழி வகைகளையே மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கூறியிருக்கின்றமை மிகப் பாரதூரமான விடயம்.

அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இப்போதைக்கு சிந்திக்கவில்லை எனக் கூறுவதும் பாரதூரமான விடயம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!