Sunday, August 3, 2025
Huisதாயகம்நாட்டை விட்டு வெளியேறத் தயாராகும் 7,000 வைத்தியர்கள்; வெளியாகிய அதிர்ச்சித் தகவல்..!

நாட்டை விட்டு வெளியேறத் தயாராகும் 7,000 வைத்தியர்கள்; வெளியாகிய அதிர்ச்சித் தகவல்..!

நாட்டை விட்டு சுமார் 7,000 வைத்தியர்கள் வெளியேறத் தீர்மானித்துள்ளனர் என்றும் சுமார் 2,000 வைத்தியர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் 5,000 வைத்தியர்கள் தங்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

2025 வரவு செலவுத் திட்டம் மூலம் வைத்தியர்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு முழுவதும் உள்ள வைத்திய சாலைகளில் 7,000 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் வைத்தியர்கள் தங்கியிருப்பதை நீட்டிப்பதன் மூலம் இலவச சுகாதார சேவைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட 2025 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கான முன்மொழிவை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்துள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும். அனைத்து வகை வைத்தியர்களுக்கும் தகுதிகள், செயல்திறன் மற்றும் சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தனித்துவமான சம்பள அமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!