Sunday, August 3, 2025
Huisதாயகம்வன்னி அபிவிருத்தி நாயகன் போலிக் கடவுச்சீட்டுடன் இந்தியாவில் கைது..!

வன்னி அபிவிருத்தி நாயகன் போலிக் கடவுச்சீட்டுடன் இந்தியாவில் கைது..!

வன்னி மாவட்ட முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் கோட்டா அரசில் அபிவிருத்தி நாயகனாக வலம் வந்தவருமான கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில் இந்தியாவின் கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழகப் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நீதிமன்றில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நாட்டை விட்டு தப்பியோட முயன்றமை பாரிய குற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!