Sunday, August 3, 2025
Huisதாயகம்யாழில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி; இளைஞன் தலைமறைவு..!

யாழில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி; இளைஞன் தலைமறைவு..!

யாழில் 14 வயது மாணவி ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பிலான முறைப்பாடு நேற்று (14) முன் வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

சம்பவமானது செட்டியார்மடம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. 14 வயது சிறுமியொருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று (14) வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்செயலுடன் சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!