9 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.
குறித்த சிறுமியின் தாத்தாவின் இறுதிச் சடங்கிற்குப் பின்னர், தனியாக இருந்த பாட்டிக்கு உதவியாகச் சென்றுள்ளார். 27/11/2024 அன்று, பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்து இருவரும் கணவன்-மனைவி போல நடந்து கொண்டுள்ளனர். அன்றிலிருந்து அவர்கள் பலமுறை கணவன் மனைவியாக இருந்துள்ளனர்.
குறித்த சிறுமிக்கு மாதவிடாய் தவறியதால், ஜனவரி 2025 இல், அவரது தாயார் அவளை பரிசோதனைக்கு வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்று மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
பின்னர் சிறுமி பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள அவரது சகோதரி தங்கியிருந்த ஒரு தங்கும் விடுதிக்கு அனுப்பப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


Recent Comments