Saturday, January 24, 2026
Huisதாயகம்பாடசாலை மாணவர்களின் காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு..!

பாடசாலை மாணவர்களின் காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு..!

25 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீட்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியான காலம் 2025 பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த நிலையில், வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலை மாணவர்களுக்கு காலணிகளை வழங்குவதற்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2025 மார்ச் 20 வரை நீட்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அஸ்வெஸ்ம நலன்புரி நன்மைகளைப் பெறுபவர்களுக்கு பணமாகவும் ஏனையவர்களுக்கு வவுச்சராகவும் வழங்கப்பட்டுள்ளமை குறைபாடாக உள்ள போதும் குறித்த காலணி வவுச்சர்கள் மற்றும் 6000ரூபாய் வவுச்சர்கள் என்பவற்றை பெற்றோர் மற்றும் மாணவர்கள் சிலர் பணமாக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றமை கண்டறியப்ப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!